காலில் அதிகப்படியான கருமையா? வீட்டில் இத பயன்படுத்தி பாருங்கள்
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
அதிலும் ஒரு சில பெண்கள் சருமத்திற்கும் தரும் பாராமரிப்பை பாதத்திற்கு கொடுப்பது இல்லை.
இதனால் பாதமானது கருமையாகும். உங்கள் சருமத்திற்கு நிறத்தை தருவது மெலனின். இது அதிகமாக இருந்தால் சருமம் கருமையாக இருக்கும்.
ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில இயற்கையான பொருட்களை வைத்து எப்படி ஈஸியான முறையில் காலில் உள்ள கருமையை போக்கலாம் என பார்க்கலாம்.
வெள்ளரிக்காய் சாறு
-
ஒரு வெள்ளரிக்காயை இரண்டாக வெட்டி எடுத்து, அதில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
-
பின் ஒரு துணியில் அதை தொட்டி பாதம் முழுவதும் தேய்த்துக் கொள்ளவும்.
- அடுத்து எழுமிச்சை சாறு சேர்த்து மசாஜ் செய்யவும்.
- இதை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து, பின கழுவினால் பாதத்தில் உள்ள கருமைகள் நீங்கும்.
உருளைக்கிழங்கு
-
ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து, வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
-
பின் அதை 20 நிமிடங்கள் ஊற வைத்து பாதத்தை கழுவவும்.
- இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர கருமையானது நீங்கும்.
எலுமிச்சை சாறு
-
ஒரு எலுமிச்சையை வெட்டி சாற்றை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
-
பின் காலில் மசாஜ் செய்த்து அப்படியே ஊற வைக்கவும்.
- பின் தண்ணீரில் கழுவி எடுத்தால் காலில் உள்ள கருமை நீங்கும்.
தக்காளி
-
தக்காளியை தோல் நீக்கி சாற்றை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
-
அதில் 3 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்துக்கொள்ளவும்.
-
பின் பாதத்தில் தடவி மசாஜ் செய்யது 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- இதை தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
பப்பாளி மற்றும் தேன்
-
ஒரு பப்பாளியில் 6 துண்டுகளை எடுத்துக் கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் 2 டீஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்துக் கொள்ளவும்.
- பின் அதை ஒரு பேஸ்ட் போன்று மசித்துக்கொள்ளவும்.
-
இதை அதைப் பாதத்தில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும்.
- 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து கழுவினால் நல்லது.
- இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.
மேலும் பாதத்தில் அரிப்பு மற்றும் தோல் பிரச்சனைகள் இருப்பவர்கள் இதை பயன்படுத்துக்கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |