அக்குளில் இருக்கும் முடியை இனி ஷேவ் செய்ய வேண்டாம்... இதை செய்தாலே போதும்
பொதுவாகவே பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் அதை கெடுக்கும் விதமாக கை, கால், முகம், அக்குள் போன்ற பகுதிகளில் தேவையற்ற முடிகள் வளரும்.
அதை நீக்குவதற்காக பல முறைகளையும் பின்பற்றுவார்கள். ஆனால் அது தொடர்ந்து வளர்ந்துக்கொண்டே தான் இருக்கும். அதிலும் அக்குள் பகுதியில் வளரும் முடியானது அப்பகுதியே கருமை ஆக்கிவிடும்.
அதை பல பெண்கள் ஷேவ் செய்வார்கள். இப்படி ரேசர் கொண்டு ஷேவ் செய்தால், அது அப்பகுதியில் அரிப்பை உண்டாக்கி, அசௌரியம் ஏற்படும்.
ஆகவே அப்பகுதியில் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்கவும் கருமை ஏற்படாமல் இருக்கவும் என்ன செய்யலாம் என பார்க்கலாம்.
மஞ்சள் சிகிச்சை
தேவையான பொருட்கள்
-
1/2 கப் மஞ்சள் தூள்
-
ரோஸ் வாட்டர்
- வெதுவெதுப்பான நீர்
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
-
பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
- அடுத்து வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து அக்குளை துடைக்க வேண்டும்.
-
இதை அடிக்கடி செய்வதன் மூலம் அக்குளில் உள்ள முடிகள் நீங்கி விடும்.
பேக்கிங் சோடா சிகிச்சை
தேவையான பொருட்கள்
-
பேக்கிங் சோடா
- தண்ணீர்
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடாவைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
-
இது ஓரளவிற்கு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
- இரவில் படுக்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அக்குளில் உள்ள முடி நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |