மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு - ஆன்லைன் மூலம் எப்படி செய்வது?
மக்கள் தொகை சுயகணக்கெடுப்பப்பை எவ்வாறு இணைய வழியில் செய்வது என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நடத்தப்படும் வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முறை, புதிதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணைய வழியில் சுய கணக்கெடுப்பில்(Self Enumeration) கலந்து கொண்டு உங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.

சுயகணக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்கள், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வீட்டிற்கு வரும் ஊழியர்களிடம் 33 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இந்த இணைய வழி சுய கணக்கெடுப்பு ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 வரை நடைபெற உள்ளது.
இணைய வழியில் செய்வது எப்படி?
இந்த சுயகணக்கெடுப்பில் பங்குபெற விரும்புபவர்கள் se.census.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாநிலத்தை தேர்வு செய்து, திரையில் தோன்றும் பாதுகாப்பு குறியீட்டை (Captcha) உள்ளிடவேண்டும்.

அதன் பின்னர், குடும்ப தலைவரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்ட வேண்டும். குடும்ப தலைவரின் பெயராக வீட்டில் உள்ள யார் பெயரை வேண்டுமானாலும் வழங்கலாம்.

உங்கள் ஈமெயில் முகவரியும் வழங்கலாம். ஆனால் கட்டாயமில்லை. சுய கணக்கெடுப்பு முடிந்த பின்னர், சுய பதிவேட்டு அடையாள எண் (SE ID) மொபைல் எண், மற்றும் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை உள்ளிட்டு, சுயகணக்கெடுப்பை எந்த மொழியில் செய்ய உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து மாவட்டத்தை தேர்வு செய்து, உங்கள் பின்கோடை உள்ளிட்டு, அதைத்தொடர்ந்து மேப்பில் உங்கள் வீடு இருக்கும் இடத்துக்கு நகர்த்தி, அதை 'சேவ்' செய்ய வேண்டும்.
அதன் பின்னர், திரையில் தோன்றும் 33 கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும். பெரும்பாலான கேள்விகள் உங்களுடைய வீட்டினை பற்றியதாக இருக்கும்.

கேள்விகளுக்கு பதிலளித்து முடித்த பின்னர், ஒருமுறை சரிபார்த்து விட்டு Submit கொடுத்தால், உங்கள் மொபைல் எண், மற்றும் ஈமெயில் முகவரிக்கு சுய பதிவேட்டு அடையாள எண் (SE ID) அனுப்பி வைக்கப்படும்.

Submit கொடுத்த பின்னர், இதில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய முடியாது. பெயரை சரியாக குறிப்பிட வேண்டியது அவசியம்.
மற்ற விவரங்கள் தவறாக பதிவு செய்யப்பட்டு விட்டால், வீட்டிற்கு கணக்கெடுக்க வரும் போது அவர்களிடம் தெரிவித்தால் அவர்கள் அவர்களுக்கு திருத்தம் செய்ய அணுகல் உள்ளது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஒவ்வொரு வீடாக வந்து ஊழியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்வார்கள்.
ஏற்கனவே சுயகணக்கெடுப்பில் விவரங்களை பதிவு செய்தவர்கள், வீட்டிற்கு வரும் ஊழியர்களிடம் 11 இலக்க சுய பதிவேட்டு அடையாள எண்ணை (SE ID) அளித்தால் போதுமானது. 33 கேள்விகளுக்கும் அவர்களிடம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் சுயகணக்கெடுப்பில் அளித்த விவரங்களை அவர்கள் உங்களிடம் கேட்டு சரிபார்த்து கொள்வார்கள். திருத்தும் செய்ய வேண்டிய தகவல்கள் இருந்தால் அவர்களிடம் தெரிவிக்கலாம்.
2ஆம் கட்ட கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டின் பிப்ரவரியில் நடைபெறும். இதன் முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்படும். 2ஆம் கட்ட கணக்கெடுப்பில், குடும்ப உறுப்பினர்களின் கல்வித் தகுதி, தொழில், இடம்பெயர்வு, சாதிவாரி விவரங்கள் உள்ளிட்ட தரவுகள் சேகரிக்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |