பனிப்பாறைச் சரிவில் சுவிஸ் கிராமம் மூழ்கிய விடயம்: ஒரு துயரச் செய்தி
சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சுவிஸ் கிராமம் ஒன்று மூழ்கிய விடயம் தொடர்பில் ஒரு துயரச் செய்தி வெளியாகியுள்ளது.
சுவிஸ் பனிப்பாறைச்சரிவு
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பனிப்பாறைச்சரிவில், Blatten என்னும் கிராமமே கிட்டத்தட்ட மண்ணில் புதைந்தது.
அப்போது, கிராமத்தில் வாழ்ந்துவந்த ஆடு மேய்ப்பவரான ஒரு 64 வயது நபர் மட்டும் மாயமாகியிருந்தார்.
இந்நிலையில், பொலிசார் அந்த கிராமத்தில் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மனித உடல் ஒன்றின் பாகங்கள் கிடைத்துள்ளன.
அவரது உடல் முறைப்படி அடையாளம் காணப்படவில்லை என்றாலும், பனிப்பாறைச் சரிவில் சிக்கி மாயமானவர் அவர் ஒருவர்தான் என்பதால், அந்த உடல் மாயமான அந்த ஆடு மேய்க்கும் நபருடையதுதான் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |