இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்... கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள்
இங்கிலாந்தில் பாலம் ஒன்றில் கிடந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் பல வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்
இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள பாலம் ஒன்றில் கிடந்த இரண்டு சூட்கேஸ்களில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன், லண்டனிலுள்ள குடியிருப்பு ஒன்றில் சில உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது அந்த இரண்டு வழக்குகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளது
அதாவது, லண்டனிலுள்ள Shepherd's Bush என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் ஓரினச்சேர்க்கையாளர்களான Albert Alfonso (62) என்பவரும் Paul Longworth (71) என்பவரும் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்கள்.
தற்போது அந்த குடியிருப்பிலும், பிரிஸ்டல் பாலத்திலும் கிடைத்த உடல் பாகங்கள் இவர்கள் இருவருடையதும்தான் என தெரியவந்துள்ளது.
கொலையாளி சிக்கினார்
அவர்கள் இருவரையும் கொலை செய்ததாக Yostin Andres Mosquera (34) என்னும் நபரை பொலிசார் பிரிஸ்டலில் கைது செய்துள்ளார்கள்.
இவரும், Albert மற்றும் Paul உடன், அவர்கள் வாழ்ந்த அதே குடியிருப்பில் சிறிது காலம் தங்கியிருந்துள்ளார்.
கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள்
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நபர் பாலத்தில் சூட்கேஸ்களை போட்டுவிட்டு தப்பியோடமுயன்றபோது, சைக்கிளில் வந்த ஒருவர் அவரை தனது மொபைலில் வீடியோ எடுக்க, அவர், போய்விடு, போய்விடு என சத்தமிட்டுள்ளார்.
அத்துடன், என் பாஸ் ரொம்ப மோசமானவர் என அவர் அந்த சைக்கிளில் வந்த நபரிடம் ஸ்பானிஷ் மொழியில் சத்தமிடும் காட்சிகள் அந்த மொபைல் வீடியோவில் சிக்கியுள்ளன. அவர் சைக்கிளில் வந்தவரின் மொபைலை தட்டிவிட முயன்று பின் தப்பியோடி இருளில் மறையும் காட்சிகளும் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளன.
எதனால் Albert மற்றும் Paulஐ அவர் கொலை செய்தார் என்பதை அறிய பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |