பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை
வடகொரியா, பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்குள் மனிதக்கழிவுகளைக் கொண்டு இறக்கிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காற்றில் பரவும் மனிதக்கழிவுகளால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறித்து எச்சரித்துள்ளார் பிரித்தானிய மருத்துவர் ஒருவர்.
தென்கொரியாவில் வந்திறங்கிய 260 ராட்சத பலூன்கள்
வடகொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட பலூன்களுடன், மலம் மற்றும் குப்பை அடங்கிய 260 மூட்டைகள் தென்கொரியாவில் வந்திறங்கியுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் மேலும் வலுவடைந்துள்ளது.
Image: YTN
பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை
இந்நிலையில், பிரித்தானியாவில் அதேபோல பலூன்களில் மனிதக்கழிவுகள் வந்து இறங்கினால் என்ன ஆகும்? அதனால் என்னென்ன நோய்கள் பரவக்குடும் என்பது குறித்து எச்சரித்துள்ளார் பிரித்தானிய மருத்துவர் ஒருவர்.
Image: YTN
பொதுவாக, மனிதக்கழிவிலிருந்து காற்றில் பரவும் கிருமிகள் குறித்து யாரும் அதிகம் பேசுவதில்லை என்று கூறும் மருத்துவர் Dr. Lawrence Cunningham, வயிற்றுப் பிரச்சினை உருவாகி, சத்தமாக மலம் வெளியேறுவதை வேடிக்கையான விடயமாகத்தான் பலரும் பேசுகிறார்கள், ஆனால், அது சீரியஸான விடயம் என்கிறார்.
அப்படி, வேகமாக வெளியேரும் மலத்திலிருந்து பாக்டீரியா, வைரஸ் மற்றும் பாரசைட் வகை கிருமிகள் பரவலாம் என்கிறார் அவர். குறிப்பாக, இப்படி காற்றில் பரவும் நோராவைரஸ் என்னும் கிருமிகள் தொற்றாகப் பரவுவதைக் குறித்து நான் அறிந்திருக்கிறேன் என்கிறார் Dr. Lawrence Cunningham.
Image: Getty Images/iStockphoto
என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?
இப்படி கழிவறையிலிருந்து பரவும் கிருமிகளைத் தடுப்பதற்காக, கழிவறைகளில், காற்று வெளியேறுவதற்கான ஜன்னல்கள் அமைப்பதும், அவற்றை திறந்துவைப்பதும் அவசியம் என்கிறார் அவர்.
Image: Getty Images/iStockphoto
அத்துடன், கழிவறைகளை அவ்வப்போது கிருமிநீக்கம் செய்வதும், சுத்தம் செய்வதும் அவசியம் என்று கூறும் Dr. Lawrence Cunningham, மனிதக்கழிவுகள் நம் மீது பட்டுவிட்டால், நம் உடைகளை சுத்தமாகத் துவைப்பதும், வழக்கமான குளியலைவிட அதிக கவனத்துடன் சோப் பயன்படுத்தி உடலை சுத்தம் செய்வதும் அவசியம் என்கிறார். ஏனென்றால், சுத்தம் செய்யப்படாத கைகள் மூலம், இந்தக் கிருமிகள் நமது கண்கள், மற்றும் வாய் வழியாக உடலுக்குள் நுழைந்து வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்கிறார் அவர்.
Image: YONHAP/EPA-EFE/REX/Shutterstock
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |