சாபத்தால் கல்லாக மாறும் மனிதர்கள்...இந்த கோவிலின் இரகசியம் என்ன?
இந்தியாவில் உள்ள பல வினோத கோவில்கள் காணப்படுகின்றது. அதில் ஒன்று தான் ராஜஸ்தானில் உள்ள கிராடு கோவில். அதிகமான பக்தர்களும், சுற்றுலாப் பெணிகளும் வந்து செல்லும் இப்பகுதியில் சிவனுக்கென்று ஐந்து கோவில்கள் உள்ளன.
மக்களை ஈர்க்கும் கோவிலாக மட்டுமல்லாமல் பயம்காட்டக்கூடிய ஒரு கோவிலாகவும் காணப்படுகின்றது. இந்தியாவின் சபிக்கப்பட்ட கோவில் என்றே இக்கோவில் குறிப்பிடப்படுகிறது. இந்த கோவிலின் சாபம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கிராடு சிவன் கோவில், ராஜஸ்தான்
ராஜஸ்தானின் பர்மர் பகுதியில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் பாலைவனப்பகுதியில் கிராடு கோவில் அமைந்துள்ளது. சிற்பங்கள் நிறைந்த சிறிய கட்டிடங்களாக உள்ளன. இது தற்போது புதிய சுற்றுலா தலமாக மாறி உள்ளது.
கிராடு என்பதன் உண்மையான பெயர் கிராவுகாட் ஆகும். 12 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோமேஸ்வர் என்ற மன்னர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர்.
சாபம்
அழகு மற்றும் செல்வ வளத்தால் அடிக்கடி அந்நிய படையெடுப்புக்களால் பாதிக்கப்பட்டதால்துறவி ஒருவரை அழைத்து வந்து சிறப்பு பூஜைகளை செய்து நாட்டின் செழிப்பை மேம்படுத்தினர்.
தனது சீடருடன் வந்த துறவி, திரும்பிச் செல்லும் போது அந்த நாட்டின் வளத்தை பாதுகாக்கும் பொறுப்பை சீடரிடம் ஒப்படைத்துள்ளார். பின் நாட்டின் வளம் வழமைப்போன்று மாறியதும், சீடனை மறந்துவிட்டார்கள்.
ஒரு நாள் அந்த சீடன் நோயினால் பாதிக்கப்பட்டதால், அவனை யாரும் கவனித்துக்கொள்ளவில்லை. ஒரு குயவனின் மனைவி மாத்திரமே அந்த சீடனை கவனித்து வந்துள்ளார்.
அந்த சமயத்தில் திரும்பி வந்த துறவி, நாட்டு மக்கள் அனைவரும் தனது சீடனை கண்டுகொள்ளாமல் விட்டதை தெரிந்து கொண்டு, ஒட்டுமொத்த ராஜ்யமும் மனிதர்களே இல்லாத இடமாக போகட்டும் என சாபம் கொடுத்தார். குயவனின் மனைவியை தவிர மொத்த ராஜ்யமும் கல்லாக மாற அவர் சாபம் அளித்தார்.
துறவியின் சாபம் உண்மையானது. நாட்டில் உள்ள அனைவரும் கல்லாக மாறியுள்ளார்கள்.
ஆகவே இக்கோயிலில் இரவு நேரத்தில் யாரும் தங்கக் கூடாது என்ற விதி உள்ளது. விதியை மீறி தங்கினால் மனிதர்களாக இருப்பவர்கள் கல்லாக மாறி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |