நான் சம்பாதித்த வீட்டை உனக்கு தரமாட்டேன்... இந்திய வம்சாவளி பெண்ணை மண்டையை உடைத்து கொன்ற கணவர்
பிரித்தானியாவில் தான் சம்பாதித்த வீட்டை மனைவிக்கு தர விரும்பாத கணவர் ஒருவர், இந்திய வம்சாவளியினரான தன் முன்னாள் மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இங்கிலாந்தில், Leamington Spa என்ற இடத்தில் வாழ்ந்துவந்த Bally என்ற Balvinder Gahir (54)ம் அவரது கணவரான Jasbinder Gahir (54)ம், விவாகரத்து செய்துபிரிந்த நிலையில், தங்கள் வீடு ஒன்றை யார் உரிமை கோருவது என்பதில் பிரச்சினை இருந்துள்ளது.
480,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த வீடு Jasbinder சம்பாதித்தது என்பதால், அதை தன் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்க விரும்பாத அவர், முன்னாள் மனைவியுடன் சண்டையிட்டிருக்கிறார், அதை Ballyக்கு கொடுக்கமாட்டேன் என்று அவர் தன் பிள்ளைகளிடமும் கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நாள் Bally தன் வீட்டில் தாக்கப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடப்பது தெரியவந்துள்ளது. மருத்துவ உதவிக்குழுவினர் வந்து பார்க்கும்போது, Bally பலமாக தாக்கப்பட்டதில், அவரது மண்டையோடு உடைந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
ஆகவே, அவரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இதற்கிடையில், சம்பவம் நடந்த அன்று Bally வீட்டுக்கு சற்று தொலைவில், அவரது முன்னாள் கணவரும், மகனான Rohan (23)ம் கார் ஒன்றை கொண்டு நிறுத்தியதும், காரிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்ற Jasbinder, சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் திரும்ப, தந்தையும் மகனுமாக அங்கிருந்து செல்லும் காட்சிகளும் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து பொலிசார், Jasbinderஐயும் அவரது மகனான Rohanஐயும் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சொத்துக்காக மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற Jasbinderக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 28 ஆண்டுகளுக்கு அவரால் சிறையிலிருந்து வெளியே வரமுடியாது.
தந்தையின் குற்றத்தை மறைப்பதற்காக, சம்பவம் நடந்த வீட்டிலிருந்து அவரை தனது காரில் அழைத்துச் சென்ற Jasbinderஇன் மகனான Rohan, தாங்கள் வந்து சென்றதை மோப்ப நாய்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, காரில் இருந்த காலடி மெத்தை மற்றும் துணிகளை கார் சென்ற பாதையில் போட்டு எரித்திருக்கிறார்.
குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த Rohanக்கு மூன்றரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்காக கணவனே மனைவியையே மண்டையோடு உடையும் அளவுக்கு தாக்கி கொல்ல, அதற்கு பெற்ற மகனே உடந்தையாக இருந்த இந்த வழக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.