கணவன் வாங்கிய புதிய ஸ்மார்ட்போன்! உயிரை விட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்: பரிதாப சம்பவம்
தமிழகத்தில் கணவன் வாங்கிய புதிய செல்போன் வாங்கிய நிலையில், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(32). லாரி டிரைவரான இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் மகள் உள்ள நிலையில், சூர்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிலம்பரசன் 16 ஆயிரம் ரூபாய்க்கு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதனை அறிந்த சூர்யா வருமானத்திற்கு மீறி செல்போன் தேவையா என கேட்டதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு சூர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவரை அவரது தாயார் அம்சவல்லி சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், கணவன் வீட்டிற்கு வந்த சூர்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூற, சூர்யாவின் பெற்றோர் இதில் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்
சிலம்பரசன் சூர்யா தம்பதியினருக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பொலிசார் பரிந்துரை செய்துள்ளனர்.