மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியா சென்ற பிரித்தானியர்: அநாதரவாக நிற்கும் பிள்ளைகள்
பிரித்தானிய குடிமகன் ஒருவர், தன் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.
அவர் மீண்டும் பிரித்தானியாவுக்குப் புறப்பட்ட நிலையில், அவர் பயணித்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாக, தாயுடன் தந்தையையும் இழந்து அவரது பிள்ளைகள் அநாதரவாக நிற்கிறார்கள்.
மனைவியின் கடைசி ஆசை...
பிரித்தானிய குடியுரிமை பெற்றவரான அர்ஜூன் ( Arjun Patoliya, 37), தன் மனைவியான பாரதி (Bharti) மற்றும் இரண்டு மகள்களுடன் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் அவரது மனைவி புற்றுநோயால் மரணமடைந்தார்.
மரணமடையும் முன், தனது சொந்த ஊரான குஜராத்தில் தனது அஸ்தியை தூவவேண்டும் என பாரதி அர்ஜூனிடம் கேட்டுகொண்டுள்ளார்.
தன் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக அர்ஜூன் இந்தியா சென்றிருந்தார்.
அவர் ஜூன் மாதம் 12ஆம் திகதி பிரித்தானியா திரும்புவதற்காக ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நிலையில், அந்த விமானம் விபத்துக்குள்ளானது.
விமான விபத்தில் பலியான 200க்கும் அதிகமானவர்களில் அர்ஜூனும் ஒருவர்.
சோகம் என்னவென்றால், இரண்டு வாரங்களுக்கு முன் தாயை இழந்த துக்கத்தில் இருந்த தம்பதியரின் பிள்ளைகள், தற்போது விமான விபத்தில் தந்தையையும் இழந்துள்ளதால் அநாதரவாக நிற்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |