அமெரிக்காவில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வந்தபோது கணவர் மரணம்.., குழந்தைக்கு பதில் சொல்ல முடியவில்லை என மனைவி கண்ணீர்
குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பெண் கண்ணீர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிடன் அதிகாரி, மனைவி மற்றும் மூன்றரை வயது மகன் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் கடந்த 8-ம் திகதி அன்று சொந்த ஊருக்கு வந்தனர்.
பின்னர், அவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தபோது தான் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றது. இதில் தீவிரவாத தாக்குதலில் பிடன் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், "சுற்றுலாப் பயணிகளின் ஊர் குறித்து தீவிரவாதிகள் கேட்டனர். பின்னர் ஆண்களை மட்டும் தனியாக நிற்க வைத்து அவர்களின் மதம் குறித்து கேட்டனர்.
இதையடுத்து, அவர்களை ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டனர். என் மகன் கண்முன்னே கணவர் கொல்லப்பட்டார்.
இப்போது அப்பா எங்கே என்று என் மகன் கேள்வி கேட்கிறான். அவனின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை " என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |