மனைவி குளிக்க மறுத்ததால் கணவன் எடுத்த அதிரடி முடிவு! சோகத்தில் குடும்பத்தினர்கள்
உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் தினமும் குளிக்க மறுப்பு தெரிவித்ததால் அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றுள்ள வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சண்டூஸ் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் குவார்ஸி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் அவரிடம் முத்தலாக் என்று கூறி விவாகரத்து பெற்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் தனது கணவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸ் சம்மந்தப்பட்ட நபரை விசாரிக்கும் போது, தனது மனைவி தினமும் குளிப்பதில்லை. அவரை குளிக்க சொன்னாலே இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவதாக தெரிவித்தார்.
இனிமேல் என்னால் அவருடன் வாழ முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே மகளிர் காவல் நிலையத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகின்றது.
மனைவி குளிக்காததால் கணவர் விவாகரத்து கேட்ட வினோத சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.