தலைமுடியை அரிவாளால் அறுத்து.. மனைவியை அடித்து கொடுமை செய்த கணவர்! இளம்பெண் செய்த துணிச்சலான காரியம்
இந்தியாவில் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் பாரத். இவரது மனைவி சாவித்ரி. பாரத் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பாரத் தனது பெற்றோர்களுடன் சேர்ந்து மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்தால் வருத்தப்படுவார்கள் என்று எண்ணி சாவித்ரி பிறந்த வீட்டில் எதுவும் கூறாமல் மறைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாரத் தனது மனைவியின் தலைமுடியை அரிவாளால் அறுத்து, சரமாரியாக அடித்து கொடுமை செய்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சாவித்ரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமைகளை பொறுக்க முடியாத சாவித்ரி துணிச்சலாக காவல் நிலையத்தில் தனது கணவர், மாமியார், மாமனார் மூவர் மீதும் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடைப்படையில் பொலிஸ் பாரத்தை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரது தாய் மற்றும் தந்தை இருவரையும் போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.