பெண் கொலை வழக்கில் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்... உறவினர்களுக்கு திகிலை உருவாக்கியுள்ள செய்தி
பிரித்தானியாவில் பெண் ஒருவரைக் கொலை செய்ததற்காக இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட கொலையாளி மற்றும் அந்த பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்துள்ளதால், கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
பத்து ஆண்டு கால திருமண வாழ்க்கையில் கொடுமைகளை அனுபவித்து வந்த Geeta Aulakh (28), தன் கணவரான Harpreet Aulakh (43)விடம் விவாகரத்துக் கோரினார்.
மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரமடைந்த Harpreet, Sher Singh(30) என்பவரிடம் 5.000 பவுண்டுகளைக் கொடுத்து தன் மனைவியைக் கொலை செய்துவிடும்படி கூற, லண்டனில் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்ற Geeta பட்டப்பகலில் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
Geetaவை கொலை செய்ததற்காக Singhஐயும், கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதற்காக Harpreetஐயும் பொலிசார் கைது செய்ய, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இது நடந்தது 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...
எட்டு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப்பின் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் Harpreetம் Singhம். அதற்குப் பிறகு Harpreet 20 ஆண்டுகளும், Singh 14 ஆண்டுகளும் சிறையில் செலவிடவேண்டும். அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும்.
ஆனால், அரசியல்வாதி ஒருவரின் உறவு இருப்பதால் இருவரும் இந்தியாவில் சுதந்திரமாக நடமாடுவதாக, பிரித்தானியாவில் கொல்லப்பட்ட Geetaவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களில் தங்கள் விடுதலையை பார்ட்டி வைத்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு Harpreetம் Singhம் கொண்டாடும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, Harpreet தன் மனைவி Geetaவின் தங்கை Anita Shinhக்கு மிரட்டல் விடுத்திருக்கிறான். நீ இந்தியாவுக்கு வரும்போது உன்னைக் கொன்றுவிடுவேன் என தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் Anitaவுக்கு அவன் கொலை மிரட்டல் விடுக்க, Anita குடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
ஏற்கனவே திருட்டுத்தனமாகத்தான் Harpreet பிரித்தானியாவுக்கு வந்தான், இன்னும் ஒரு முறை அவன் அதேபோல் வந்தால் தங்களை அவன் கொன்றுவிடுவான் என்கிறார் Anita.
இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, இந்திய அரசுக்கு அவசர தகவல் ஒன்றை அனுப்பியுள்ளதாக பிரித்தானிய அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.