குழந்தை பிறந்த 10 நாளில் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்! மிகுந்த வலியுடன் எழுதி வைத்த கடிதம்

death investigation Husband wife kid
By Raju Sep 18, 2021 03:08 AM GMT
Report

இந்தியாவில் குழந்தை பிறந்த 10 நாட்களில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள தாரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் திலீப் (26). இவருக்கும் பிரதீபா (22) என்ற பெண்ணிற்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிரதீபா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தம்பதி இடையே சில காலமாகவே குடும்ப விடயம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் பிரதீபாவுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற திலீப் பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இருவரின் சடலங்களையும் பொலிசார் கைப்பற்றிய பின்னர் திலீப் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

குழந்தை பிறந்த 10 நாளில் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்! மிகுந்த வலியுடன் எழுதி வைத்த கடிதம் | Husband Killed Wife Suicide After Baby Village

அதில், என் வாழ்க்கையில் விரக்தியடைந்துவிட்டேன், எனக்கு திருமணம் ஆன போதும் பின்னரும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் திருமணம் செய்த பெண் என் குடும்பம் மற்றும் அனைத்தும் நாசமாகிவிடும் என அப்போது எனக்கு தெரியாது.

அவளும், அவள் தாயாரும் என் மீது மிக கேவலமான குற்றச்சாட்டை முன் வைத்ததால் நான் மிகவும் மனமுடைந்து போனேன். என் தாயாரிடம் பிரதீபா மிகவும் மோசமாக நடந்து கொண்டார், நான் என் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்கிறேன்.

என் தாயார் மற்றும் சகோதரிகள் வரும் வரை என் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டாம் என மிகுந்த வலியுடன் அந்த கடிதத்தை திலீப் எழுதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை பிறந்த 10 நாளில் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்! மிகுந்த வலியுடன் எழுதி வைத்த கடிதம் | Husband Killed Wife Suicide After Baby Village

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US