45 வயது மனைவியின் தலையில் கல்லை போட்டு துடி துடிக்க கொலை செய்த கணவன்! சந்தேகத்தால் நடந்த பயங்கரம்
இந்தியாவில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் சம்பவத்தில், அதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வரும் பாபுவிற்கு, ரதிகலா என்ற 45 வயதில் மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரதிகலா நடத்தையில் பாபுக்கு சந்தேகம் எழ, இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதே போல் நேற்று காலையும் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற, பாபு தன்னுடைய மனைவி ரதிகலா தலையில் கிரைண்டர் கல்லைப்போட்டு துடி துடிக்க கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ரதிகலாவின் கணவர் பாபுவை கைது செய்த போலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.