குடும்ப தகராறில்.. மனைவியை அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்த கணவன்.. வெளியான திடுக்கிடும் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப சண்டை காரணமாக மனைவியை அடித்து கொலை செய்த கணவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் வசித்து வருபவர் பாலையன்(60). இவரது மனைவி வடுவம்மாள்(55). இருவருக்கிடையே அடிக்கடி பணம் சம்மந்தமாக பிரச்சனைகள் நடந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அது பெரிய சண்டையாய் வெடித்துள்ளது. ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பாலையன் ஆத்திரத்தில் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், மயங்கி விழுந்த வடுவம்மாள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து செய்த கொலையை வெளியே தெரியாமல் மறைக்க மனைவியின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார்.
ஆனால் சில நாட்களாக வடுவம்மாள் வெளியே வரவில்லை என்பதால் அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். அப்போது பாலையனிடம் பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் தனது மனைவியை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். தோட்டத்தில் புதைக்கப்பட்ட வடுவம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.