வீட்டு வாசலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி! கணவன் செய்து வந்த தவறின் ரகசியத்தை கண்டுபிடித்த பின் நேர்ந்த விபரீதம்
தமிழகத்தில் கணவன் செய்து வந்த தவறான விடயத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த மனைவி அவராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிப்பவர் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43).
கரிகாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை ரகசியமாக அவர் செய்து வந்த நிலையில் பச்சையம்மாள் அதை கண்டுபிடித்து அவரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை பச்சையம்மாள் இதுகுறித்து கரிகாலனிடம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி கரிகாலன், தன் மனைவி பச்சையம்மாளின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளார். வீட்டு வாசலில் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், புவனகிரி காவல்துறையினருக்கு தகவல் கூறினார்கள்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கரிகாலன் பொலிசார் தேடி வருகின்றனர்.