ரூ.50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக நண்பரிடம் மனைவியை விற்ற கணவர்
ரூ.50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக கணவர் ஒருவர் தனது மனைவியை நண்பரிடம் விற்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மனைவியை விற்ற கணவர்
இந்திய மாநிலமான மத்தியபிரதேசம், தார் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள கன்வான் காவல்நிலையப் பகுதியில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, இந்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரை எடுத்துக் கொண்டு பூஜ்ஜிய எப்.ஐ.ஆர் ஆக பதிவுசெய்து தார் காவல் நிலையத்திற்கு அனுப்பினர்.
அந்த புகாரில் அந்த பெண், " எனது கணவர் சூதாட்டக்காரர். இதனால் அவருக்கு கடன் அதிகரித்து கொண்டே இருந்தது. மேலும், தனக்கு பணம் கொடுத்த நண்பர்களில் ஒருவருடன் உடலுறுவு வைத்துக் கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், "ரூ.50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக கணவர் ஒருவர் தனது மனைவியை நண்பரிடம் விற்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை வன்புணர்வு கொடுமை செய்துள்ளனர்" என்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிப்பதற்கான தேடுதலை தொடங்கியுள்ளோம் என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |