மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தலாம்! பிரச்சனை பண்ண மாட்டேன் என கூறிய மனைவி... நம்பிய கணவனுக்கு நள்ளிரவில் நேர்ந்த பரிதாபம்
தமிழகத்தில் நள்ளிரவில் காதல் கணவனை நெஞ்சில் கத்தியால் குத்தியும், மாமியாரை சரமாரியாக கடித்தும் வைத்த இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியை சேர்ந்தவர் இலக்கியா, திருவிழா மேடைகளில் ஆடும் கலைஞர்களுக்கு மேக் அப் போடும் தொழில் செய்கிறார். இலக்கியாவுக்கும், பாலமுருகன் என்பவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஓராண்டுக்கு பிறகு இருவருக்கும் இடையே இருந்த காதல் கசந்து அடிக்கடி சண்டை போட தொடங்கினர், முக்கியமாக இலக்கியா கணவனிடம் தொடர்ந்து பிரச்சினை செய்தார்.
இந்த நிலையில் மனைவி குறித்து பாலமுருகன் பொலிசில் புகார் செய்ய, பின்னர் இலக்கியா, பாலமுருகனிடம், இனி எந்த பிரச்சினையும் செய்யமாட்டேன். நாம் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தலாம் என கூறினார்.
இந்த சூழலில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இலக்கியா தூங்காமல் செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த பாலமுருகன், யாரிடம் இந்த நேரத்தில் பேசுகிறாய் என கேட்டார். அதற்கு நான் அப்படி தான் பேசுவேன் என இலக்கியா கூற இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இலக்கியா அருகிலிருந்த கத்தியை எடுத்து பாலமுருகன் மார்பில் சரமாரியாக குத்தினார். அவர் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பாலமுருகன் தாயார் கையையும் கடித்தார்.
பின்னர் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது, பாலமுருகன் எனக்கு எப்படியாவது விவாகரத்து வாங்கி கொடுங்கள் என கதறி வருகிறார்.
அவரின் புகாரையடுத்து இலக்கியாவை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.