சீரழித்த பெண்ணையே மணந்த வாலிபர்! அடுத்த 6 மாதத்தில் குகைக்குள் மனைவியுடன் தனிமையில் இருந்துவிட்டு கொன்ற கொடூரம்
இந்தியாவில் துஷ்பிரயோகம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொண்ட நபர் திருமணமான 6 மாதத்தில் மனைவியை கொலை செய்துள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக பபிதா என்ற பெண் பொலிசில் கடந்தாண்டு புகார் கொடுத்தார்.
இதையடுத்து ராஜேஷை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர். பின்னர் பிரமாண பத்திரத்தில் பபிதாவை திருமணம் செய்து கொள்வதாக ராஜேஷ் தெரிவித்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் ராஜேஷ் - பபிதா திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 15ம் திகதி பபிதாவை காணவில்லை என அவர் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர்.
புகாரையடுத்து பொலிசார் பபிதா கடைசியாக யாருடன் போனில் பேசினார் என பார்த்த போது ராஜேஷுடன் பேசியது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது தனக்கு பபிதா காணாமல் போனது பற்றி தெரியாது என கூறிய அவர் ஒருகட்டத்தில் மனைவியை கொலை செய்தததை ஒப்பு கொண்டார்.
பொலிசார் ராஜேஷ் கூறிய இடத்துக்கு அவருடன் சென்று சடலத்தை கைப்பற்றினர். ராஜேஷ் அளித்த வாக்குமூலத்தில், என் மனைவியும் மாமியாரும் என்னை துன்புறுத்தி வந்தனர். இதனால் பபிதாவை கொல்ல முடிவு செய்தேன்.
அவளுக்கு போன் செய்து ஒரு இடத்துக்கு வரவழைத்து அவருடன் உறவு கொள்ள வேண்டும் என கூறினேன்.
இதன்பின்னர் ஒரு குகைக்குள் சென்று இருவரும் தனிமையில் இருந்தோம். அதற்கு பிறகு அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என கூறினார்.
வாக்குமூலத்தை தொடர்ந்து ராஜேஷை பொலிசார் கைது அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.