என் சாவுக்கு இவங்க தான் காரணம்! தற்கொலைக்கு முன் புதுமாப்பிள்ளை வெளியிட்ட வீடியோ: பரிதாப சம்பவம்
தமிழகத்தில் ஆடி மாதத்தில் மனைவியை பிரித்ததால் விரக்தியடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவ செல்வம். டிரைவரான இவருக்கும், கூடுவாஞ்சேரியை சேர்ந்த ரேணுகா (20), என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இப்போது ஆடி மாதம் என்பதால், கணவன், மனைவியும் தனித் தனியாக இருக்க வேண்டும் என்பதற்காக ரேணுகாவின் பெற்றோர் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மனைவி இல்லாத ஏக்கத்தில் இருந்த செல்வம், கடந்த வாரம் மாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு அவரை வெளியில் தூங்கிக் கொள்ளும் படி கூறியுள்ளனர். இதற்கிடையில், ரேணுகாவின் பெற்றோர் சென்னை வந்த போது, மனைவியை என்னுடைய வீட்டிற்கு அனுப்பி வையுங்கள், என்னால் தனியாக இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் இரு குடும்பத்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடும் வேதனையடைந்த செல்வம், நேற்று முன் தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவர் தன்னுடைய செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், ரேணுகாவை பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை.
இதனால், தற்கொலை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். குறித்த வீடியோவில், முதலில் தூக்குப்போட்டபோது கயிறு அறுந்து கீழே விழவே, மீண்டும் 2வது முறையும் கயிறு அறுந்தது.
ஆனால், 3-வது முறை முயன்றபோது தற்கொலை நிறைவேறியது. இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி, தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.