தரையிறங்கினால் வெடிக்கும் என மிரட்டல் - நடுவானிலே ஜேர்மனி திரும்பிய விமானம்
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால், நடுவானிலே ஜேர்மனிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஜேர்மனி திரும்பிய விமானம்
ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5:44 (இந்திய நேரப்படி) மணியளவில் லுஃப்தான்சா LH752 விமானம் புறப்பட்டது.
இந்தியாவின் ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட இந்த விமானம், ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சுமார் 2 மணிநேரம் விமானம் வானில் பறந்த நிலையில், நடுவானிலே திருப்பி விடப்பட்டு, மீண்டும் ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஜேர்மனி நேரப்படி 17.30 மணியளவில் விமானம் தரையிறங்கியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விமானம் ஹைதராபாத் நோக்கி பறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போதே, விமானம் தரையிறங்கினால் வெடிக்கும் என மிரட்டல் விடப்பட்டதால், விமானம் ஜேர்மனிக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |