லண்டனில் ஹைதராபாத் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: சமீபத்திய தகவல்
உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா சென்றிருந்த இந்திய இளம்பெண் ஒருவர் பிரேசில் நாட்டு இளைஞர் ஒருவரால் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஹைதராபாத் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு
இந்தியாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி (Kontham Tejasvini, 27). கடந்த ஆண்டு, ஜூன் மாதம் 14ஆம் திகதி, லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த தேஜஸ்வினியையும், அவருடன் தங்கியிருந்த அகிலா (28) என்பவரையும், பிரேசில் நாட்டவரான கெவின் (Keven Antonio Lourenco De Morais, 25) என்னும் இளைஞர் கத்தியால் குத்தினார்.
மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தும், தேஜஸ்வினியைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகிலா உயிர் பிழைத்துவிட்டார்.
இன்று தீர்ப்பு
தேஜஸ்வினியைக் கொலை செய்த கெவின் தப்பியோடினாலும், அன்றே அவரை பொலிசார் கைது செய்துவிட்டனர். கெவினும் அவரது காதலியும், தேஜஸ்வினி தங்கியிருந்த அதே குடியிருப்புக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
அவருக்கும் தேஜஸ்வினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், போதைக்கு அடிமையானவரான கெவின், தேஜஸ்வினியிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் மறுத்ததால், கெவின் அவரைக் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |