2 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தந்தை! பதறவைக்கும் பகிர் சம்பவம்
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 2 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இந்திய மாநிலம் தெலுங்கானாவில் உள்ள ஹைதெராபாத் நகரத்தில், லங்கர் ஹவுஸின் பிரசாந்த் நகரில் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஹசீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹசீப் வெள்ளிக்கிழமை மாலை வேகவேகமாக வெளியில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். வந்ததும் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு வேகமாக முதல் மாடிக்கு சென்றுள்ளார்.
அங்கு தனியாக தூங்கிக்கொண்டு இருந்த தனது 2 வயது மகனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
அவர் கத்தியை எடுத்துச் செல்வதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டிருந்த அவரது மனைவி, ஓரிரு நிமிடங்களில் சந்தேகமடைந்து முதல் தளத்தில் இருக்கும் அறைக்கு சென்றார். அவர் மேலே செல்லும்போது, ஹசீப் வேகமாக கீழே இறங்கி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
அறைக்கு சென்று பார்த்த அந்த தாய் தனது குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிறகு குடும்ப உறுப்பினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து லங்கர் ஹவுஸ் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார், எனவே கொலைக்கான காரணம் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது" என்று கூறினார்.
சிசிடிவி கமெரா காட்சிகளை பொலிஸார் குறுக்கு சோதனை செய்தனர், அதில் ஹஸீப் குழந்தையை கொலை செய்துவிட்டு வேகமாக சாலையில் நடந்து செல்வது தெரிந்தது.
அவர், வேலை இல்லாமல் விரக்தியில் இருந்ததாகவும் மற்றும் சில உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொலிஸார் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.