பாய் பிரண்ட் வாடகைக்கு... ஹைதராபாதில் ஒரு நவீன மோசடி
இளம்பெண்களை குறிவைத்து ’பாய் பிரண்ட் வாடகைக்கு’ என்னும் மோசடி ஒன்று அரங்கேறிவருவதாக ஹைதராபாத் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
பிசினஸ் வட்டாரத்தில், ’பெண்ணுக்கு அழகையும், ஆணுக்கு ஆசையையும், முதியோருக்கு பயத்தையும் விற்பனை செய்’, பிழைத்துக்கொள்ளலாம் என்னும் ஒரு சொல்வழக்கு சமீப காலமாக வழங்கிவருகிறது.
அதாவது யார் யார் எதற்கு ஆசைப்படுவார்களோ, அதை பயன்படுத்திக்கொண்டு, அதற்கேற்ப பிசினஸ் செய்யவேண்டும் என்பது அதன் பொருள்.
பாய் பிரண்ட் வாடகைக்கு...
இந்நிலையில், இளம்பெண்களின் ஆசையை இலக்காக வைத்து ’பாய் பிரண்ட் வாடகைக்கு’ என்னும் ஒரு மோசடி இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் நகரில் உலவிவருவதாக பொலிஸ் ஆணையரான V.C. Sajjana எச்சரித்துள்ளார்.

’தனிமையாக உணர்கிறீர்களா? உங்களுடன் காபி அருந்த, சினிமாவுக்கு வர ஆண் நண்பர் தேவையா?’ எனக்கேட்கும் விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் அதிகரித்துவருகிறது என்கிறார் அவர்.
ஆண் நண்பர் ஒருவரை ஒரு மணி நேரம் சந்தித்து காபி சாப்பிட 499 ரூபாய், அவருடன் சினிமாவுக்குச் செல்ல 1,249 ரூபாய், ஷாப்பிங் செல்ல 1,499 ரூபாய், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 1,999 ரூபாய், ஆண் நண்பருடன் 10 மணி நேரம் செலவிட 4,499 ரூபாய் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது என்கிறார் பொலிஸ் ஆணையரான V.C. Sajjana.
விடயம் என்னவென்றால், விளம்பரங்களில் காட்டப்படும் இளைஞர்கள் உண்மையானவர்கள் அல்ல, AI மூலம் உருவாக்கப்பட்டவர்கள். விளம்பரத்தை நம்பி யாராவது, குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டால், எதிர்முனையில் பேசும் நபர் இனிமையாகப் பேசி ஒரு தொகையை டெபாசிட் செய்யுமாறு கேட்பார்.
பணம் கட்டியதும், அவ்வளவுதான், அதற்குப் பிறகு அந்த எண்ணை தொடர்புகொள்ளமுடியாது.
ஆக, இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என எச்சரித்துள்ள பொலிசார், தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பரிமாற வேண்டாம் என்றும், அப்படி யாராவது இந்த மோசடியில் சிக்கிக்கொண்டது தெரியவந்தால், உடனடியாக சைபர் கிரைம் எண்ணுக்கு புகாரளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |