இணையத்தில் தேடப்பட்ட அந்த விடயம்... லண்டன் உணவகத்தில் இந்திய இளைஞரின் கொடுஞ்செயல்
இந்தியாவில் காதலித்த பெண் ஒருவரை லண்டனில், உணவகம் ஒன்றில் கொடூரமாக கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற இளைஞர் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.
உறவை முறித்துக் கொள்வதாக
ஸ்ரீராம் அம்பர்லா (25) என்பவர் இந்தியாவில் ஹைதராபாத் நகரில் கடந்த 2016ல் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவருடன் அறிமுகமாகி, இருவரும் ஒருகட்டத்தில் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் நாளடைவில் தமது காதலியை உடல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியதுடன், பிரிந்து சென்றால் தாம் தற்கொலை செய்துகொள்வதாகவும் மிரட்டி வந்துள்ளார். இருப்பினும் ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத சூழலில், 2019ல், உறவை முறித்துக் கொள்வதாக குறித்த பெண் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அம்பர்லாவை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார். 2022ல் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த அந்த பெண்ணைத் தொடர்ந்து அம்பர்லாவும் அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்.
இதனிடையே, குறித்த பெண்ணின் சகோதரர் வாங்கிய 15,000 பவுண்டுகள் கடன் தொகையை குறிப்பிட்டு, தம்மை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அம்பர்லா தொடர்ந்து தொல்லை அளிக்கத் தொடங்கியுள்ளார்.
மட்டுமின்றி, தங்கள் உறவு குறித்து பெற்றோரிடம் அம்பலப்படுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார். மட்டுமின்றி, பலருடன் படுக்கையை பங்கிடுவதாக குறிப்பிட்டு, மொத்தமும் அம்பலப்படுத்த இருப்பதாக அச்சுறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், மார்ச் 5ம் திகதி 2022ல் Barking சாலையில் அமைந்துள்ள Hyderabad Wala உணவகத்திற்கு அம்பர்லா சென்றுள்ளார். குறித்த உணவகத்தில் இவரது முன்னாள் காதலி பணியாற்றி வந்துள்ளார்.
மறைத்து வைத்திருந்த கத்தியால்
எந்த ஒரு வாடிக்கையாளர் போன்றே அம்பர்லாவையும் அந்த பெண் வரவேற்று உபசரித்துள்ளார். ஆனால் அந்த உணவகத்தில் வைத்தே, உணவருந்தியபடி அம்பர்லா தமது அலைபேசியில் கொலை செய்வது எப்படி?
பிரித்தானியாவில் வெளிநாட்டவர் ஒருவர் கொலை செய்தால் என்ன நடக்கும்? கத்தியால் கொலை செய்வது எப்படி? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தேடியுள்ளார். மட்டுமின்றி, அந்த உணவகத்தில் இருக்கும் ஒவ்வொரு உணவாக வாங்கிக் கொண்டே இருந்துள்ளார்.
இதனால், தொடர்புடைய பெண் அடிக்கடி அம்பர்லாவுக்கு உணவு பரிமாறும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தம்மை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டியுள்ளார். ஆனால் அம்பர்லாவின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தம்மால் வாழ முடியாது என அவர் நிராகரித்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அம்பர்லா மறைத்து வைத்திருந்த கத்தியால் தமது முன்னாள் காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து கத்தியை அங்கேயே விட்டுவிட்டு, பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
9 முறை கத்திக்குத்துக்கு இலக்கான இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் என்றே கூறப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில்,
தற்போது கொலை முயற்சி வழக்கில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, தண்டனை காலம் முடிவடைந்த பின்னரும் அவரை விடுதலை செய்ய வேண்டுமா என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |