எனக்கு கவலையில்லை - சடலமாக மீட்கப்பட்ட மாணவரின் கடைசி வார்த்தைகள்
அமெரிக்காவில் உயிரை மாய்த்த 22 வயது இந்திய மாணவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உயிரை மாய்த்த இந்திய மாணவர்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 22 வயதான ஸ்ரீனிவாசய்யா(saketh sreenivasaiah), பள்ளிப்படிப்பை பெங்களூருவின் ஸ்ரீ வாணி கல்வி மையத்தில் பயின்ற இவர், கல்லூரி படிப்பை சென்னை ஐஐடியில் பயின்றுள்ளார்.

இதனையடுத்து, கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிர் மூலக்கூறு பொறியியலைப் பயின்று வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 9 ஆம் திகதி, ஸ்ரீனிவாசய்யாவை காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
லேக் அன்சா மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளைச் சுற்றி காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதில், அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள டில்டன் பிராந்திய பூங்கா (Tilden Regional Park) அருகே உள்ள ஒரு குடியிருப்பின் அருகே, அவரது பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பையை கண்டெடுத்தனர்.
6 நாட்களுக்கு பிறகு கடந்த 14 ஆம் திகதி அன்சா ஏரி அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், அவரது உடலைக் காவல்துறையினர் மீட்டெடுத்ததை உறுதிப்படுத்தியதுடன், அவரது உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்தது எனக்கூறி இரங்கல் தெரிவித்தது.
The Consulate deeply regrets to inform that local police have confirmed the recovery of the body of the missing Indian student, Saketh Sreenivasaiah. We extend our heartfelt condolences to his family and loved ones during this profoundly difficult time.
— India in San Francisco (@CGISFO) February 14, 2026
The Consulate stands…
ஹைப்பர்லூப்பிற்கான மைக்ரோ சேனல் கூலிங் சிஸ்டம் மற்றும் அதன் ஒரு முறையை" கண்டுபிடித்ததற்காக காப்புரிமை பெற்ற 6 பேரில் ஸ்ரீனிவாசய்யாவும் ஒருவர் ஆவார்.
எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை
அவரின் மறைவு குறித்து பேசிய அவரது அறைத் தோழர் பனீத் சிங், "சர்வதேச மாணவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது. காணாமல் போவதற்கு 2 வாரங்களுக்கு முன்பில் இருந்து அவர் சரியாக சாப்பிடவில்லை, சரியாக பேசவில்லை, சரியாக உறங்கவில்லை. சிப்ஸ் மற்றும் பிஸ்கட் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்.

ஜனவரி 21 அன்று, அன்சா ஏரிக்கு அவர் என்னை அழைத்தார். நான் சோம்பேறியாக இருந்ததால் அவருடன் செல்லவில்லை. அவரின் உயிரைப் பறிக்கும் இடம் அதுவாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
ஒருமுறை சிவப்புநிற குளியல் உடையுடன் வகுப்பறைக்கு வந்த அவரிடம், ஏன் இதனை அணிந்து வகுப்பறைக்கு வந்தாய் என கேட்டேன். அதற்கு "நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை" என்று பதிலளித்தார்.
மேலும், அவர் எப்போதும் ஏதாவது முட்டாள்தனமாகச் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போது அவர் உண்மையில் என்ன சொல்ல வந்தார் என்பது புரிகிறது. வாழ்க்கைக்கு நேர்மாறானது ஒருபோதும் மரணம் அல்ல. அவர் அக்கறை கொள்வதை நிறுத்தியது, தனது சொந்த வாழ்க்கையையும் கவனிக்காமல் போக வழிவகுத்தது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |