நானாக இருந்தால் கோலியை விட்டிருக்கமாட்டேன்! வலியை உணர்ந்து பேசிய பிரைன்லாரா
பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி இந்த ஐபிஎல் தொடரோடு விலகும் நிலையில், இது குறித்து மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரர் பிரைன்லாரா பேசியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ஆன கோலி, ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பே, தான் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்கான டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன் பின் சில நாட்கள் கழித்து பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து இந்த ஐபிஎல் தொடரோடு விலக முடிவு செய்துள்ளதாக கூறினார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் அவருக்காகவாது கோப்பையை பெங்களூரு ஜெயிக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றைய கொல்கத்தா அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில், பெங்களூரு தோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியது.
தோல்விக்கு பின் பேசிய கோலி, நான் கேப்டனாக தொடராவிட்டாலும், ஐபிஎல் கடைசி போட்டி விளையாடும் வரை பெங்களூரு அணிக்கு தான் விளையாடுவேன், விஸ்வாசம் மிகவும் முக்கியம் என்று கூறினார்.
இந்நிலையில், இது குறித்து மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா, நான் மட்டும் பெங்களூரு அணியின் உரிமையாளராக இருந்திருந்தால், கோலியை நிச்சயமாக கேப்டன் பதவியை விட்டு விலகவிட்டிருக்கமாட்டேன்.
அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, மாற்றியிருப்பேன். அவர் கேப்டன் இல்லாமல், ஒரு வீரராக பெங்களூரு அணிக்கு விளையாடுவதை எனக்கு பார்க்க மனம் இல்லை என்று = கூறியுள்ளார்.
லாரா இப்படி கூறுவதற்கு முக்கிய காரணம், கேப்டன் பதவியில் இருந்து விலகி மீண்டும் அதே அணிக்கு ஒரு கோப்பை கூட வென்று கொடுக்காமல் வீரராக விளையாடும் போது அது எப்படி இருக்கும் என்ற வலி லாராவுக்கு தெரியும் என்பதால், அதை மனதில் வைத்தே இப்படி பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் லாரா மேற்கிந்திய தீவு அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.