ராஜாஜி திட்டத்தால் பாதிக்கப்பட்டேன்.., மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசிய நடிகர் விஜயகுமார்
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தால் பாதிக்கப்பட்டேன் என்று நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியது
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயகுமார், "நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்.நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முதலமைச்சராக ராஜாஜி இருந்தார்.
அவர் அப்போது குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்தார். அந்த காரணத்தினால் தான் நான் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். அதற்கு மேல் என்னால் மேற்படிப்பை தொடர முடியவில்லை.
என்னால் அப்போது படிக்க முடியவில்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை. மதிய உணவு திட்டம் மட்டுமில்ல., காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன.
கல்விக்காக இரவு, பகல் பாராமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைத்து வருகிறார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |