விரைவில் வருகிறேன்.. இனி ஒருநிமிடம் கூட பார்த்துக் கொண்டிருக்க முடியாது! சசிகலா பரபரப்பு அறிவிப்பு
அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதாக பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கடந்த பிப்ரவி மாதம் தமிழகம் திரும்பிய சசிகலா, அரசியலிருந்து விலகுவதாக அறிவித்து ஆதவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகினார்.
ஆனால், சசிகலா தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.
எல்லோரும் அஇஅதிமுக பிள்ளகைள் தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்கமாட்டார். இவர்களா? அவர்களா? என்றெல்லாம் பார்க்கமாட்டார்.
அதனையெல்லாம் பார்த்துதான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் நம் பிள்ளைகள் தான். அஇஅதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம்.
அதனை எப்பொழுதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டம், இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை.
விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என சசிகலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.