ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது - இந்தியா விமானப்படை அறிவிப்பு
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக இந்தியா விமானப்படை அறிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் (Operation Bunyun Al Marsoos) என்ற பெயரில், இந்தியா பகுதிகளில் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வந்தது.
இந்த தாக்குதலை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் மீது அவ்வப்போது ட்ரோன் தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்து வந்தது.
இதனையடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தன.
இதனையடுத்து, எல்லையில் பாகிஸ்தான் சில அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தாலும், பெரியளவிலான தாக்குதல் நடைபெறவில்லை.
இந்திய விமானப்படை
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய விமானப்படை ஆபரேசன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
The Indian Air Force (IAF) has successfully executed its assigned tasks in Operation Sindoor, with precision and professionalism. Operations were conducted in a deliberate and discreet manner, aligned with National Objectives.
— Indian Air Force (@IAF_MCC) May 11, 2025
Since the Operations are still ongoing, a detailed…
நடவடிக்கைகள் விவேகமான முறையில், தேசிய நோக்கங்களுடன் சீரமைக்கப்பட்ட முறையில் நடத்தப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை அளிக்கப்படும்.
சரிபார்க்கப்படாத தகவல்களை யூகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப் படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |