ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை? என்ன காரணம்?
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் சதமடிக்க, 471 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டியது.
தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து, 465 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், 3 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது.
இந்நிலையில், பர்மிங்காமில் வரும் ஜூலை 2 ஆம் திகதி தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் பண்ட்டிற்கு தடை?
முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளில், இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் ஆடிய போது, 61வது ஓவரை முகமது சிராஜ் வீச, ஹாரி புரூக் அதை பவுண்டரிக்கு அடிப்பார்.
உடனடியாக பந்தின் வடிவம் மாறி விட்டதாகவும், புதிய பந்து தரும்படியும் ரிஷப் பண்ட் நடுவரிடம் கோரிக்கை வைப்பார்.
Meet our new vice captain pic.twitter.com/8VTpZptSAR
— LSG×Shreyansh (@LSGfam_) June 22, 2025
பந்தை ஆய்வு செய்த நடுவர், பந்து சரியாக உள்ளதாக கூறி பந்தை மாற்ற மறுப்பு தெரிவிப்பார். இதில் ஆத்திரமடைந்த ரிஷப் பண்ட், நடுவரிடம் வாக்குவாதம் செய்து விட்டு, நடுவரை நோக்கி பந்தை வீசுவார். ஆனால் பந்து நடுவரின் மேல் படாது.
நடுவரின் முடிவை ஏற்காமல் வாக்குவாதம் செய்தது, ஆபத்தான முறையில் நடுவர் மீது பந்தை வீசுவது ஆகியவை ஐசிசியின் விதிமுறை மீறலாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக, ரிஷப் பண்ட் ஒரு போட்டியில் விளையாட தடை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி முடிவடைந்த பின்னர், இது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |