15 ஓட்டங்களைக்கூட தாண்டவில்லை., முதல் போட்டியிலேயே இந்திய அணி படுதோல்வி
துபாயில் நடந்த 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியிலேயே அதிர்ச்சி அளித்தது.
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.
கேப்டன் சோபி டிவைன் (36 பந்து, 7 பவுண்டரி, 57 நாட் அவுட்), தொடக்க வீரர் பிளிம்மர் (23 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆகியோர் விரைவாக ஓட்டங்களை குவித்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்களில் ரேணுகா சிங் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 102 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 20 ஓட்டங்களை எட்ட முடியவில்லை. அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 15 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ராஸ் மேரி மேர் (4/19), லீ தஹூஹு (3/15), ஈடன் கார்சன் (2/34) ஆகியோர் திறன்பட பந்துவீசினர். டிவைனுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs New Zealand, india vs new zealand women, ICC Women's T20 World Cup, 2024