இனி நீச்சல் குளங்களுக்குச் செல்ல அடையாள அட்டை கட்டாயம்: ஜேர்மன் தலைநகரில் கட்டுப்பாடுகள்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பொது நீச்சல் குளங்களில் குளிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
என்னென்ன கட்டுப்பாடுகள்?
இனி பொது நீச்சல் குளங்களை பயன்படுத்துவோர், முன்கூட்டியே ஒன்லைனில் டிக்கெட்கள் வாங்கவேண்டும். அத்துடன், நீச்சல் குளங்களுக்கு வரும்போது, நுழைவாயிலில் அடையாள அட்டையையும் காட்டவேண்டியிருக்கும்.
Neukölln மற்றும் Kreuzberg பகுதிகளில் இருக்கும் நீச்சல் குளங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதுடன், அங்கு CCTV கமெராவும் பொருத்தப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
இப்படி திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு, நீச்சல் குளங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதுதான் காரணம்.
Alle müssen sich in unseren Bädern sicher fühlen, besonders Familien mit Kindern. Unsere Bäder brauchen:
— Kai Wegner (@kaiwegner) July 13, 2023
✅ mobile Polizeiwachen an den gefährdeten Standorten
✅ Stärkung der Sicherheitsdienste allgemein
✅ Besseres Einlasssystem und konsequente Durchsetzung der Hausverbote pic.twitter.com/Z8GZkUTEae
கடந்த வார இறுதியில், Neuköllnஇல் அமைந்துள்ள நீச்சல் குளம் ஒன்றில் 50 இளைஞர்கள் சண்டையிட்டுக்கொண்டார்கள். தற்போது அந்த நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது.
ஆகவேதான் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |