அமெரிக்காவில் விமான கண்காட்சியில் நடந்த சம்பவம்., உயிர் தப்பிய விமானிகள்
அமெரிக்காவில் நடந்த விமான கண்காட்சியில் 2 போர் விமானங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இடாஹோ மாநிலத்தில் உள்ள மவுண்டன் ஹோம் ஏர் ஃபோர்ஸ் பேஸ்-இல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “Gunfighter Skies Air Show” நிகழ்ச்சியில் இந்த விபத்து ஏற்பட்டது.
நிகழ்ச்சியின் போது இரண்டு EA-18G Growler போர் விமானங்கள் வானில் பறக்கும் போது ஒன்றுடன் ஒன்று மோதின.
இரு விமானங்களும் தீப்பற்றி கீழே விழத் தொடங்கின. அப்போது அதிலிருந்த மொத்தம் நான்கு விமானிகளும் உடனடியாக வெளியேறி (eject) பாதுகாப்பாக தரையிறங்கினர்.

இந்த விபத்துக்குப் பிறகு விமான தளம் உடனடியாக முடக்கப்பட்டது. அவசர உதவி குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த விமான கண்காட்சி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்ட முக்கிய நிகழ்ச்சியாகும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்த விபத்தால் நிகழ்ச்சியின் மீதமுள்ள பகுதிகள் ரத்து செய்யப்பட்டன.
BREAKING: Two fighter jets collide and crash during an air show in Idaho. pic.twitter.com/hfdPd6uvE2
— Insider Paper (@TheInsiderPaper) May 17, 2026
இதற்கு முன்பும் இத்தளத்தில் நடந்த விமானக் காட்சிகளில் சில விபத்துகள் நடந்துள்ளன. 2003-ல் Thunderbirds விமானம் விபத்துக்குள்ளானது. 2018-ல் ஹேங்-கிளைடர் பைலட் உயிரிழந்தார்.
தற்போது இந்த சம்பவம், விமானக் காட்சிகளின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |