பயங்கர ஆயுதத்தை பையில் மறைத்து பள்ளிக்கு எடுத்து வந்த சிறுமி செய்த வெறிச்செயல்!
அமெரிக்காவில் நடுத்தர பள்ளி ஒன்றில் 12 வயது சிறுமி துப்பாக்கியால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியையை சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Idaho மாநிலத்திலே உள்ள நடுத்தர பள்ளியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
6ம் வகுப்பு படிக்கும் மாணவி (12 வயது) தனது பையில் கை துப்பாக்கியை மறைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார்.
திடீரென பையிலிருந்து துப்பாக்கியை எடுத்த மாணவி சரமாரியாக சுட தொடங்கியுள்ளார்.
இதில் சக மாணவர்கள் இருவர் மற்றும் ஒரு ஆசிரியை என 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆசிரியை ஒருவர் சிறுமியிடமிருந்த துப்பாக்கியை பிடிங்கி அவரை தடுத்து மடக்கி பிடித்துள்ளார்.
சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் ஆசிரியர் பிடித்து வைத்திருந்து சிறுமியை கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.
சிறுமியின் நோக்கம் இதுவைர தெரியவில்லை. சம்பவம் குறித்து எப்.பி.ஐ மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் தொடர்ச்சியாக பெரியளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருவதை தொடர்ந்து ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன், துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கு தனது முதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
இதில், சில துப்பாக்கிகளுக்கான விதிகளை அமைப்பதற்கான முயற்சிகள் மற்றும் உள்ளூர் வன்முறை தடுப்புக்கு ஆதரவளித்தல் ஆகியவை இதில் அடங்கும்.