நாவூறும் சுவையில் இறால் இட்லி பொடி.., எப்படி செய்வது?
இந்த சுவையான இறால் இட்லி பொடி இட்லி, தோசை என அனைத்திற்கு அருமையாக இருக்கும்.
அந்தவகையில், ஆரோக்கியத்தையும், சுவையையும் அள்ளிக் கொடுக்கும் இறால் இட்லி பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காய்ந்த இறால்- 1 கப்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- பூண்டு- 10 பல்
- சின்ன வெங்காயம்- 10
- புளி- சிறிதளவு
- காய்ந்த மிளகாய்- 8
- மல்லி- 2 ஸ்பூன்
- உளுந்து- 2 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- பொட்டுக்கடலை- ½ கப்
- தேங்காய்- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் காய்ந்த இறால்களை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு, வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், மல்லி, உளுந்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் பொட்டுக்கடலை சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து வாணலில் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இவற்றை ஆறவைத்து உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதில் எண்ணெய் ஊற்றி கலந்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |