காய்கறிகள் வாங்கும் போது ஒரு போதும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!
பொதுவாகவே மரக்கறி வாங்கும் பொழுது பலவற்றை கடைப்பிடித்து வாங்க வேண்டும்.
அதாவது வாழைக்காயை தட்டி பார்த்தும், பீட்ரூடை கிள்ளி பார்த்தும், கெரட்டை கீறி பார்த்தும் வாங்க வேண்டும் என்று கூறுவார்கள்.
அவ்வாறு நாங்கள் தினமும் வாங்கும் மரக்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்வோம்.
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு வாங்கும் போது உருண்டையாக உள்ளதை வாங்க வேண்டும்.
கருணைக் கிழங்கு
முழுவதுமாக வாங்கினால் பெரியதாக வாங்க வேண்டும். அதுவே வெட்டியதை வாங்கினால் உட்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்குமாறு வாங்க வேண்டும்.
பெரிய வெங்காயம்
வெங்காயத்தின் மேற்பகுதியில் இருக்கும் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
பச்சை மிளகாய்
நீளமான பச்சை மிளகாயில் காரம் குறைவாக இருக்கும். சிறிய பச்சை மிளகாயில் காரம் கூடுதலாக இருக்கும்.
பீர்க்கங்காய்
பீர்க்கங்காய் வாங்கும் பொழுது ஒரே அளவில் இருக்க வாங்க வேண்டும்.
புடலங்காய்
இது வாங்கும் போது விதைப்பகுதி குறைவாகவும் மற்றைய பகுதி கூடுதலாகவும் இருக்க வேண்டும்.
தக்காளி
தக்காளி வாங்கும் போது சிவந்த தக்காளியை வாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் வாங்கும் போது அதை ஒரு விரலால் குற்றிபார்க்க வேண்டும். அப்படி விரல் உள்ளே சென்றால் வாங்கலாம்.
பாகற்காய்
தட்டையான நீண்ட காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும்.
வாழைப்பூ
வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால் பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்.
இஞ்சி
கீறிப்பார்த்தால் தோல் பெயர்ந்து வருவது போல் இருக்க வேண்டும்.
முருங்கைக்காய்
முருங்கைக்காயை முறுக்கி பார்த்து வாங்க வேண்டும்.
மாங்காய்
மாங்காயை காதின் பக்கத்தில் வைத்து தட்டி பார்த்து வாங்க வேண்டும்.
பூண்டு
பூண்டை வாங்கும்போது பற்பல்லாக வெளியே தெரிய வாங்க வேண்டும்.
அவரை
தொட்டு பார்த்து விதைகள் அதிகமாக உள்ள அவரையை தவிர்க்க வேண்டும்.
உருளைக் கிழங்கு
கீறினாலே தோல் உடனே கையோடு வரவேண்டும். அப்படி இருக்கும் உருளைகிழங்கு தான் வாங்க வேண்டும்.
தினசரி வாங்கும் பொழுது இதை கடைப்பிடித்து பாருங்கள். வாங்கும் மரக்கறிகள் நீண்ட நாட்கள் பழுதடையாமல் இருக்கும்.