இளையராஜா வீட்டிற்கு மருமகளாக வேண்டியவள் நான்- கண்ணீருடன் வனிதா விஜயகுமார்
சினிமாவில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட பிரபல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
வனிதா இயக்கி அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்த இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இணைந்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில், வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
வனிதா நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தில், தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைப்பில் வெளியான "ராத்திரி சிவராத்திரி" பாடலை வனிதா இயக்கியுள்ள படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இளையராஜாவின் இந்த நடவடிக்கைக்கு வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க விளக்கம் கொடுத்துள்ளார்.
இளையராஜாவின் குடும்பத்தில் நான் மருமகளாக வேண்டியவள் என்று வனிதா கூறியதுடன், இளையராஜாவை அப்பா என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
மேலும், இளையராஜா குடும்பத்தில் தானும் ஒருத்தி என்றும் வனிதா குறிப்பிட்டார். இளையராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று, இந்தப் பாடல் குறித்தும் தெரிவித்தோம்.
மேலும் தங்களுடைய படத்தில் ராத்திரி சிவராத்திரி பாடலைப் பயன்படுத்த Sony இசை நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |