இளையராஜா தன் பிறந்தநாளை ஒரு நாள் முன்னாடியே கொண்டாட காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமா இசையின் ராஜாவாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா.
அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 7000 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என பல ஹீரோக்களின் படங்களுக்கு இவர் மெட்டமைத்து கொடுத்திருக்கிறார்.
அந்த காலம் தொடங்கி தற்போது வரை தனது வசீகரிக்கும் இசையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதினை பெற்றார்.
மேலும், 2018ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அந்தவகையில், இளையராஜா, 1943ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி பிறந்தவர்.
ஆனால், தனது பிறந்தநாளை ஒரு நாள் முன்கூட்டியே ஜூன் 2ஆம் திகதியே கொண்டாடி வருகிறார்.
ஜூன் 3ஆம் திகதியான இன்று, இளையராஜாவிற்கும் பிறந்தநாள், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதிக்கும் பிறந்தநாள்.
எனவே, அவரை கௌரவிக்கும் வகையில், தனது பிறந்தநாளை ராஜா ஒரு நாள் முன்கூட்டியே ஜூன் 2ஆம் திகதி கொண்டாடி வருகிறார்.
இளையராஜாவிற்கு, இசைஞானி எனும் பட்டத்தை கொடுத்தவரும் கருணாநிதிதான்.
கருணாநிதிமீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டதால் இளையராஜா தனது பிறந்தநாளை ஒரு நாள் முன்னாடியே கொண்டாடி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |