இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்! இவர்கள் மட்டும் குடிக்கக்கூடாது..
இளநீர் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது. அதே சமயம் இளநீர் குடிப்பதால் தீமைகளும் ஏற்படுகின்றது.
இளநீர் நன்மைகள்
இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, சருமத்தை பளபளக்கச் செய்யும்.
இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமாக கால்சியம் மற்றும் பொட்டாசியம்தான் அதிகமாகத் தேவைப்படும். அவர்களுக்கும் இந்த இளநீர் நல்ல மருந்தாக இருக்கும்.
பெண்களுக்குதான் சிறுநீரகப் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. அவர்கள் இளநீரை எடுத்துக் கொள்வது நல்லது.
உடல் சூட்டிற்கு இளநீர் அதிமருந்தாக செயல்படுகிறது.
இளநீர் தீமைகள்
இளநீர் அதிகளவில் உட்கொள்வது நம்மை கழிப்பறையை நோக்கி அதிக முறை ஓட வைக்கும். அதாவது அதிகம் சிறுநீர் கழிக்க வைக்கும், இளநீரில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. அதன்படி அதிகபடியான நீரை வெளியேற்ற சிறுநீரகங்கள் உழைப்பின் தேவை அதிகமாக உள்ளது, இது தொடர்ந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
இளநீரில் சர்க்கரை அளவு குறைவு என நினைத்து மற்ற பழச்சாறுகளுக்கு மாற்றாக இதை பலரும் குடிக்கின்றனர். ஆனால் ஒரு கப் தேங்காய் நீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் இளநீர் தினமும் குடிக்க கூடாது.
ஒரு நாளைக்கு ஒரு இளநீர்தான் அருந்த வேண்டும். அதிகபட்சமாக 250 - 300 ML இளநீர் அருந்தலாம். அதிகமாக அருந்தினால் உடலின் தேவைக்கு மீறிய பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும். பின் அதற்குறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
அழற்சி இருப்பவர்களுக்கு தேங்காய் நீர் நல்லதல்ல. உணவு ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தேங்காய் நீர் பலவித பிரச்சினைகளை உண்டாக்கும். இது அழற்சியை ஏற்படுத்தி பலவித நோய்த்தொற்றுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.