மன்னர் சார்லஸ் பதவி விலகுவார்... டயானாவின் ஆவி கூறியதாகத் தெரிவிக்கும் பெண்
ஆவிகளுடன் பெசும் பெண் ஒருவர், மன்னர் சார்லஸ் பதவி விலகுவார் என மறைந்த இளவரசி டயானா தன்னிடம் கூறியதாக ஒரு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆவிகளுடன் பேசும் திறன்
இங்கிலாந்தில் வாழ்பவரான ஜெம்மா (Gemma Lonsdale, 40) என்னும் பெண்ணுக்கு, 2018ஆம் ஆண்டு புற்றுநோய் தாக்கியது. அதற்குப் பிறகு தனக்கு ஆவிகளுடன் பேசும் திறன் ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார் ஜெம்மா.
பல பிரபலங்களின் ஆவிகள் தன்னுடன் பேசுவதாக தெரிவித்துள்ள ஜெம்மா, மன்னர் சார்லசைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலை இளவரசி டயானா தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
டயானா கூறிய அதிர்ச்சியளிக்கும் தகவல்
தன்னிடம் இளவரசி டயானாவின் ஆவி பேசியதாகத் தெரிவிக்கும் ஜெம்மா, மன்னர் சார்லஸ் தனது கிரீடத்தைக் கழற்றி வைக்கும் காட்சியை டயானா தனக்குக் காட்டியதாகத் தெரிவிக்கிறார்.
Image: PA
ஏதோ ஒரு பெரிய பிரச்சினை ஏற்படப்போவதாகவும், அதன் காரணமாக மன்னர் சார்லஸ் பதவியைத் துறக்கலாம் என்றும் இளவரசி டயானா தனக்குக் காட்டியதாக தெரிவிக்கிறார் ஜெம்மா.
Image: Gemma Lonsdale / SWNS
மேலும், தான் டயானாவுடன் பேசியபோது, இளவரசி கேட் குறித்து விசாரித்ததாகவும், டயானா தனது பிள்ளைகளை பாதுகாக்க விரும்புவதாகவும், குறிப்பாக இளவரசி கேட்டை பாதுகாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Image: Tim Graham Photo Library via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |