புலம்பெயர்ந்தோரால் சுவிட்சர்லாந்துக்கு நன்மை: அரசு தரப்பு விவாதம்
புலம்பெயர்ந்தோரால் சுவிட்சர்லாந்துக்கு நன்மை எனக்கூறும் விடயம் சுவிட்சர்லாந்தில் விவாதப்பொருளாகிவருகிறது!
பின்னணி
அதாவது, புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

ஜூன் மாதம் 14ஆம் திகதி, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த விடயம் சுவிஸ் அரசுக்கு கவலையை உருவாக்கியுள்ளது.
ஏனென்றால், சமீபத்திய ஆய்வு முடிவுகள், புலம்பெயர்தல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதால், சுவிட்சர்லாந்தில் வயதாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்தல், பிறப்பு வீதம் குறைதல் ஆகிய காரணங்கள் இணைந்து, கடும் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மருத்துவத்துறை, கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறை ஆகியவை இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் எச்சரிக்கின்றன.
ஆகவே, அரசு தரப்பு, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்னும் பிரேரணைக்கு ஆதரவளிக்கவேண்டாம் என மக்களை கோரிவருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், புலம்பெயர்தல், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை இளமையாக வைத்துக்கொள்வதில் பெரிதும் உதவுவதாக சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.

சுவிஸ் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள், வெளிநாட்டவர்கள் சுவிஸ் நாட்டவர்களைவிட குறைந்தபட்சம் ஏழு வயதாவது இளையவர்களாக இருப்பதாகவும், அவர்கள் வேலை செய்யும் வயதில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வேலை செய்வதற்கு புலம்பெயர்ந்தோர் இல்லையென்றால், ஓய்வூதியம் மற்றும் முதியவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்க அரசுக்கு நிதி ரீதியில் அழுத்தம் அதிகரிக்கும் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆக மொத்தத்தில், எப்படியாவது புலம்பெயர்தலுக்கு எதிரான அந்த ’No to 10 Million Switzerland’ பிரேரணைக்கு மக்கள் ஆதரவளித்துவிடகூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
ஆகவேதான் அது தொடர்பில், பிரேரணைக்கு எதிராக பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |