பிரித்தானியாவில் இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: கவலையில் ஆழ்ந்துள்ள தம்பதியர்
பிரித்தானியாவில், இன்று முதல் குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, சுமார் 10,000 பவுண்டுகளுக்கும் அதிகமான அளவுக்கு உயந்துள்ளது.
இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்
பிரித்தானியாவில், இன்று முதல் குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 18,600 பவுண்டுகளிலிருந்து 29,000 பவுண்டுகளாக உயந்துள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டின் முதல் பகுதியில், இந்த கட்டணம், 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
இந்த கட்டண உயர்வால், பிரித்தானியாவில் வாழும் கணவர் அல்லது மனைவியைக் கொண்ட பிரித்தானியரல்லாதவர்கள், குறிப்பாக, தங்கள் துணையுடன் விரைவில் இணைந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த வெளிநாட்டவர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
எங்கள் குடும்பத்துடன் இணைந்துவாழவே விரும்புகிறோம்
அர்ஜெண்டினா நாட்டவரான Eugenia Morales, இங்கிலாந்திலுள்ள சசெக்சைச் சேர்ந்த கணவரான Connor Whiteஉடன் மூன்று ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். Eugeniaவுக்கு அர்ஜெண்டினாவில் வைத்து ஒரு மகள் பிறந்ததால், தன்னால் தன் கணவருடன் இணைந்துகொள்ளமுடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கட்டுமானப் பணி செய்துவரும் Connorக்கு, இங்கிலாந்தில் முதல் திருமணம் மூலம் பிறந்த ஒரு பிள்ளை இருப்பதால், அவரால் அந்தப் பிள்ளையை விட்டுவிட்டு அர்ஜெண்டினாவுக்குச் செல்ல முடியாது.
நாங்கள் பிரித்தானியாவுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை, எங்கள் குடும்பத்தினருடன் இணைந்துவாழவே விரும்புகிறோம் என்கிறார் Eugenia.
இந்த வருமான வரம்பு உயர்வால், தானும் தன் கணவரும் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் குடும்பமாக இணைந்து வாழ முடியுமா என்ற நிலை உருவாகியுள்ளது என்று கூறும் Eugenia, அடுத்தபடியாக அடுத்த 12 மாதங்களில் குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளதைத் தொடர்ந்து ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாக உள்ளதால், குடும்பமாக வாழ உகந்த நாடு என்னும் பிரித்தானியாவின் நற்பெயருக்கு அது தீரா களங்கத்தை ஏற்படுத்த உள்ளது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |