மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம்! எந்த இடங்களில் கட்டாயமாக அணிய வேண்டும்?
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்கி வருகின்றது. இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் மூன்றாவது அலைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றாலே மாஸ்க் அணிவது கட்டாயமாகிவிட்டது.
சமீபத்தில் இரண்டு மாஸ்க் அணிந்து கொள்வதால் கொரோனாவில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும் என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி மட்டும் நம்மை கொரோனாவில் இருந்து முழுமையாக பாதுகாக்க முடியாது. இதனால் கொரோனாவின் அபாயத்தை புரிந்து கொண்டு சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிப்பது நமது கடமையாகும்.
எந்தெந்த இடங்களில் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பொது நிகழ்ச்சிகள்:-
- திருமணம், ஊர்வலங்கள், இறுதி சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களாக உள்ளது. சிறிய அளவிலான கூட்டமாக இருந்தாலும் அங்கு முகமூடி அணிவதை உறுதி செய்ய வேண்டும். அது தொற்றுநோய்க்கான அபாயத்தை ஒரு அளவிற்கு கட்டுப்படுத்தும்.
- ஒரு தடுப்பூசி உங்கள் நோய்த்தொற்றின் வாய்ப்புகளையும் தீவிரத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்றாலும் ஒருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முகமூடி அவசியமானது.
மளிகை கடைகள்:-
- மளிகை கடைகள், ஷாப்பிங் மால் போன்றவை தான் கொரோனா ஆதிக்கம் செலுத்தும் இடங்களாக உள்ளது. ஏனென்றால் கடைகளில் கூடும் மக்கள் பல பொருள்களை தொட்ட வாய்ப்புள்ளது.
- அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் தொட்ட பொருள்களை மற்றவர்கள் தொடும் பொழுது கட்டாயமாக அவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. ஆகவே இந்த இடங்களில் இரண்டு மாஸ்க் அணிவது கட்டாயம்.
பொது இடங்கள்:-
- நம்மை சுற்றி ஏராளமான மக்கள் உள்ளனர். இவர்களில் யார் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள் என்பதை நம்மால் கணிக்க முடியாது. ஆகவே நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
- போக்குவரத்து பயணத்திற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா அச்சம் இன்றி சமூக இடைவெளி இல்லாமல் பயணித்து வருகின்றனர்.
- இதனால் தொற்று பரவ கூடிய அபாயம் உள்ளது. ஆகவே போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் பயணம் செய்யும் பொழுதும் மாஸ்க் அணிவது அவசியம்.