உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
திகதியை வெளியிட்ட பரீட்சை திணைக்களம்
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை திகதியை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகிற 19 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டையில் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திகதியும் இடமும் எக்காரணம் கொண்டும் மாற்றப்படாது என பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.