இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்காதீர்கள்! புற்றுநோயாக இருக்கலாம் உஷார்
உலகளவில் மக்களின் உயிரை காவு வாங்கும் நோய்களில் முதன்மையான இடம் புற்றுநோய்க்கு உள்ளது. புற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளை அறிந்து உடனடியாக சிகிச்சை எடுத்தால் அதில் இருந்து மீள முடியும்.
புற்றுநோய்க்கான முக்கிய ஆரம்பக்கட்ட அறிகுறிகளை காண்போம்.
நிணநீர் முடிச்சுகளில் வீக்கம் மிக முக்கிய அறிகுறியாகும். சாதாரண ஃப்ளு சளி, காய்ச்சல் போது நம்முடைய தொண்டை மற்றும் அக்குள் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் வீக்கம் அடையும்.
இது நம்முடைய உடல் அதிகப்படியாக உழைத்து கிருமிகளை அழிக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும். அதுவே தொடர்ந்து நிணநீர் முடிச்சுக்கள் இரண்டு வாரத்துக்கும் மேலாக வீக்கத்துடன் இருந்தால் அது நல்லதற்கு இல்லை.
மலம் கழிக்கும் போது எப்போதாவது ரத்தம் வந்தால் பயப்பட வேண்டாம். ஆனால் தொடர்ந்து மலத்துடன் ரத்தமும் வெளியேறுகிறது என்றால் கவனம் தேவை. ரத்தம் வெளியேறுவது ஒரு அபாய எச்சரிக்கை மட்டுமே.
அது புற்றுநோயாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எனவே, பயப்படாமல் எதனால் ரத்தம் வெளியேறுகிறது என்பதை கண்டறிய வேண்டும். ரத்தப் பரிசோதனை மூலம் புற்றுநோயா, வேறு பாதிப்பா என்பதை அறிந்துகொள்ளலாம்.
அதீத சோர்வு, சருமத்துக்கு அடியில் வீக்கம், தடித்தல், உடல் எடையில் திடீர் அதிகரிப்பு அல்லது குறைவு என மாறுபாடு ஏற்படுவது, மஞ்சள் காமாலை ஏற்படுவது, உணவு உட்கொள்வது மற்றும் செரிமானத்தில் மாறுபாடு, விழுங்குவதில் சிரமம், குரல் தடை, உணவு விழுங்குவதில் சிரமம், மூட்டு, தசை வலி, திடீர் காய்ச்சல், வியர்த்தல் போன்றவையும் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
குரல்வளையில் ஏற்படும் புற்றுநோய் காரணமாக குரல் பாதிக்கப்படும். கல்லீரலில் கட்டி ஏற்படும்போது பிலிருபின் அதிகரித்து மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
உடலில் மருக்கள் ஏற்படுவது கூட சரும புற்றுநோயாக மாறலாம் உஷார்..!