டெல்டாவை விட இந்த பாதிப்பு குறைவு.. அமெரிக்க நிபுணர் வெளியிட்ட முக்கிய தகவல்!
உலகில் புதிதாக கண்டறியப்பட்ட Omicron வைரஸ், ஐந்து வயது குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்க நிபுணர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் கொரோனாவில் இருந்து உருமாறிய Omicron வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது. இது நாளடைவில் சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் Omicron அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு இயக்குனர் டாக்டர் ரோச்சலே பெலன்ஸ்கை கூறியதாவது, Omicron வைரஸ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் டெல்டா மாறுபாட்டை விட இந்த பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் கொரோனா அதிகரிக்க Omicron வைரஸ் தான் காரணம். இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
கடைசியில் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் நாம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.