ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை இந்தியாவுக்கு வழங்கும் நாடு
இந்திய ராணுவ மருத்துவ பிரிவு, நகரும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்கிறது.
கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜேர்மனியிலிருந்து 23 நகரும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இந்த நகரும் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் ஒவ்வொன்றாலும், ஒரு மணி நேரத்திற்கு 2,400 லிற்றர் ஆக்சிஜன் தயாரிக்க முடியுமாம்.
அதன்படி, ஒரு கருவி 20 முதல் 25 நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையை சந்திக்கும்.
ஆனால், அவை இந்தியா வந்துசேர ஒரு வார காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.